காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்றுமுன்தினம் மாலை வைத்தியசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
வைத்தியசாலை ஊழியர்கள் கூட்டுறவு நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நடைபெற்றது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் அதன் கூட்டுறவு நலன்புரி சங்கத்தின் தலைவருமான டொக்டர் எம். எஸ் .எம். ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் மட்டக்களப்பு கல்லடி 243 ஆவது இராணுவ முகாம் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க, காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கஜநாயக்கா, கோவில் குளம் இராணுவ பொறுப்பதிகாரி மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யூ.எல். நஸ்ருதீன் உட்பட வைத்தியர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)