Saturday, April 27, 2024
Home » போலிக் கடவுச்சீட்டில் ஜப்பான் பயணிக்க முயன்ற ஈரானியர் கைது

போலிக் கடவுச்சீட்டில் ஜப்பான் பயணிக்க முயன்ற ஈரானியர் கைது

by damith
March 25, 2024 8:00 am 0 comment

போலி, பல்கேரிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜப்பானுக்கு செல்ல முயன்ற ஈரானியப் பிரஜை ஒருவர் விமான நிலையத்தில், குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிக ளால் (22) கைது செய்யப்பட்டார்.

ஈரானிய பிரஜையான இவர்,கடந்த (22) மாலை 4.06 மணியளவில் தோஹாவிலிருந்து QR-654 கட்டார் விமான மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இங்கிருந்தவாறு அன்றிரவு 8.30 மணிக்கு ஜப்பானின் நரிட்டா நகருக்கு செல்வதற்காக ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார். இவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, போலி பல்கேரிய கடவுச்சீட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT