128
போலி, பல்கேரிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜப்பானுக்கு செல்ல முயன்ற ஈரானியப் பிரஜை ஒருவர் விமான நிலையத்தில், குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிக ளால் (22) கைது செய்யப்பட்டார்.
ஈரானிய பிரஜையான இவர்,கடந்த (22) மாலை 4.06 மணியளவில் தோஹாவிலிருந்து QR-654 கட்டார் விமான மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இங்கிருந்தவாறு அன்றிரவு 8.30 மணிக்கு ஜப்பானின் நரிட்டா நகருக்கு செல்வதற்காக ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார். இவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, போலி பல்கேரிய கடவுச்சீட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.