விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாக அதாஉல்லா எம்.பி தெரிவிப்பு
தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவைச் சந்தித்த கல்விசாரா ஊழியர்கள் தங்களது பிரச்சினைகளை எடுத்துக்கூறியதுடன் உரிய தீர்வைப் பெற்றுத் தருமாறும் கோரினர்.இச்சந்திப்பு அண்மையில் கிழக்கு வாசலில் நடந்தது.
கல்விசாரா ஊழியர்களின் கடமை நேரங்களில் காவலாளி தவிர்ந்த ஏனையோருக்கு நேர மாற்றம் கொண்டு வரப்படல், கஷ்டப்பிரதேசம் மற்றும் அதிகஷ்ட பிரதேசங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க ல், பாடசாலை காவலாளிகளுக்கு அரச பொது விடுமுறை தினங்களில் விடுமுறை வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் இவர்கள் கையளித்தனர்.
கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோரை உடனடியாக சந்தித்து கல்விசார ஊழியர்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுத் தருவதாக அதாஉல்லா எம்.பி. இதன்போது உறுதியளித்தார்.
(அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்)