Monday, April 29, 2024
Home » கோப் குழுவிலிருந்து எரான் எம்.பி இராஜினாமா

கோப் குழுவிலிருந்து எரான் எம்.பி இராஜினாமா

by sachintha
March 19, 2024 7:05 am 0 comment

 

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து (கோப் குழு) இராஜினாமா செய்துள்ளார். அவர் தாம் கோப் குழுவிலிருந்து இராஜினாமா செய்துள்ளதையடுத்து நேற்று சபாநாயகருக்கு தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம் பெற்றுள்ள ஊடகவியலாளர் சந்திப்பின்போது சபாநாயகரிடம் தாம் இராஜினாமா கடிதத்தை கையளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோப் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில், குறிப்பாக நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதால் கோப் குழுவின் உறுப்பினராக செயல்படுவதில் அதிருப்தி ஏற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT