கணவனும் ,மகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால், வீட்டை விட்டு வெளியேறிய பெண் , வீட்டின் முன்பாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – தொல்புரம் கிழக்கை சேர்ந்த 48வயதான இராசரத்தினம் செல்வரதி என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் கணவரும் , மகளும் , நேற்று (17) பெரும் சத்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால், வீட்டை விட்டு வெளியே வந்தவேளை , திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அதனை தொடர்ந்து சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வருபவர் என மரண விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ். விசேட நிருபர்