Saturday, May 11, 2024
Home » வீட்டை விட்டு வெளியேறிய பெண் உயிரிழப்பு

வீட்டை விட்டு வெளியேறிய பெண் உயிரிழப்பு

by Prashahini
March 18, 2024 11:38 am 0 comment

கணவனும் ,மகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால், வீட்டை விட்டு வெளியேறிய பெண் , வீட்டின் முன்பாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – தொல்புரம் கிழக்கை சேர்ந்த 48வயதான இராசரத்தினம் செல்வரதி என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் கணவரும் , மகளும் , நேற்று (17) பெரும் சத்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால், வீட்டை விட்டு வெளியே வந்தவேளை , திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அதனை தொடர்ந்து சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வருபவர் என மரண விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT