கொழும்பு கோட்டை உலக வர்த்தக மையப் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு மோட்டார் சைக்கிள்களும் காரொன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உலக வர்த்தக மைய கட்டடத்திற்கு அருகில் உள்ள வீதியில் பயணித்த கார் ஒன்று, இலங்கை வங்கி மாவத்தையிலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது.
இதில்,இவ்விபத்து ஏற்பட்டதாகவும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே காயமடைந்தார். கார் சாரதி விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காரை செலுத்திய சாரதி நித்திரை கலக்கத்துடன் காணப்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தரித்து வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதே, மேற்படி கார் மோதியது. இதில், ஏழு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்