Monday, May 20, 2024
Home » மீனவர்களை அழைத்துவர அரசு அவசர நடவடிக்கை
லொரென்சோ புதா - 4 ஆழ்கடல் வள்ளம்

மீனவர்களை அழைத்துவர அரசு அவசர நடவடிக்கை

by Gayan Abeykoon
March 14, 2024 11:33 am 0 comment

லொரென்சோ புதா – 4 வள்ளத்திலிருந்த மீனவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்ட மாஅதிபர் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த இதனைத் தெரிவித்தார்.

லொரென்சோ புதா – 4 கப்பல் தொடர்பில் கடற்றொழில் திணைக்களம், கடற்படை  மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியோர் கலந்துரையாடியுள்ளன.

சட்ட நடவடிக்கைகள் சீஷெல்ஸ் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

சீஷெல்ஸ் நாட்டில் சட்ட நடவடிக்கைகளை முடித்து மீனவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்ட மாஅதிபர் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளார்” என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா மேலும் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT