நைன்வெல்ஸ் ஹொஸ்பிட்டல்ஸ் தனது மற்றுமொரு முயற்சியாக, உள்நாட்டில் உள்ள மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற முதியோருக்காக விருந்தோம்பல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு சேவைகளுக்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கின்ற “Yatra-inspired Living” என்ற அதிநவீன ஓய்வுகால உல்லாச விடுதியை அண்மையில் திறந்து வைத்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் கட்டான என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள யாத்ரா (Yatra), ஏரி மற்றும் குளத்துடன் இயற்கை அழகின் பின்னணி கொண்ட 20 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
எவற்றிலும் மிகச் சிறந்ததை நாடுகின்ற எமது முதியோரின் தேவைகளைத் தீர்த்து வைக்கும் வகையில் யாத்ரா வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், தங்குமிட வசதி, உணவு மற்றும் பான வகை, மருத்துவ மற்றும் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பொழுதுபோக்கு என, நவீன வசதிகள் பலவற்றை வழங்குகின்றது. இந்த உல்லாச விடுதியில் 26 அறைகள் உள்ளதுடன், அவை சாதாரண மற்றும் உயர் ரக அறைகள் என பிரதான பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
யாத்ராவில் சௌகரியமான மற்றும் சொகுசான தங்குமிட வசதிகள் கிடைக்கப்பெறுவதுடன், இந்த உல்லாச விடுதியிலுள்ள திறந்தவெளி உணவகம் அறுசுவைமிக்க காலை, மதிய, இரவு உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளை பரிமாறுகின்றது. விருந்தினர்கள் தாம் விரும்புகின்ற இடத்தில் இருந்து அல்லது தமது அறைகளுக்கு உணவைத் தருவித்தோ உட்கொள்ளவும் முடியும். எமது விருந்தினர்களின் நலன் கருதி, மருத்துவ உபகரணங்களுடன், தாதியர் மற்றும் பராமரிப்பு உதவியாளர்களைக் கொண்ட பிரத்தியேக மருத்துவ அணியொன்றும் இங்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் எமது நைன்வெல்ஸ் மருத்துவ அணியின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும்.
திறந்த வெளி நீச்சல் தடாகம், ஏரி மற்றும் குளத்தைச் சுற்றி வலம் வரும் வகையில் அழகான மெதுவோட்டம் மற்றும் நடைப்பயிற்சித் தடம், மீன்பிடி, படகுச் சவாரிகள், வாத்துக்கு உணவு ஊட்டுதல் மற்றும் உள்ளரங்க செயல்பாடுகளுடன் அனைத்து உபகரணங்களையும் கொண்ட விளையாட்டு அறை போன்ற பல்வேறுபட்ட பொழுதுபோக்கு தெரிவுகளையும் யாத்ரா வழங்குகின்றது. மேலும் மாதாந்த திரைப்பட இரவுப் பொழுதுகள் மற்றும் குறிப்பிட்ட தலைப்பில் ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்வுகளிலும் விருந்தினர்கள் பங்குபற்றி மகிழலாம். யோகா பயிற்சி மற்றும் பைலேட்ஸ் உடற்பயிற்சி, உடற்பயிற்சிக்கூட வசதிகள், அமைதியான தியானத்திற்கான ஏற்பாட்டிடம், ஐம்புலன் உணர்வுகளைத் தூண்டுவதற்கான பயிற்சிகள், முதியோரின் நலனுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றையும் இந்த உல்லாச விடுதி கொண்டுள்ளது.
பணிப்பாளர்/பிரதம செயல்பாட்டு அதிகாரி வைத்தியர் விபாஷ் விஜேரத்ன அவர்கள் திறப்புவிழா வைபவத்தின் போது கருத்து வெளியிடுகையில், “உணர்வுபூர்வமான வாழ்வு என்ற பதத்தைக் கொண்ட யாத்ரா, வெறுமனே ஓய்வுகாலத்தைப் போக்குவதற்கான ஒரு உல்லாச விடுதியல்ல. இது எமது முதியோரின் வாழ்வை வளப்படுத்துவதற்கான ஒரு அர்ப்பணிப்பாகும். அக்கறை, சௌகரியம், மற்றும் சமூகம் ஆகிவற்றின் சிறந்த கலவையைக் கொண்ட அனுபவத்தை விருந்தினர்களுக்கு வழங்கும் பேரின்ப சொர்க்கமொன்றை இதன் மூலமாக அவர்களுக்கு வழங்குவதே எமது கனவு,” என்று குறிப்பிட்டார்.
யாத்ராவின் வைபவரீதியான திறப்பு விழா, வெறுமனே ஒரு நிகழ்வு என்பதற்கும் அப்பாற்சென்று, முதியோருக்கு சௌகரியமான பின்னணியுடன், அதியுயர்ந்த அக்கறையை வழங்கும் அர்ப்பணிப்பின் ஈடுபாட்டுக்கான முயற்சியின் அடையாளமாக உள்ளது. நைன்வெல்ஸ் ஹொஸ்பிட்டல்ஸின் திறமைமிக்க முகாமைத்துவத்தின் கீழ் உள்நாட்டில் உள்ள மற்றும் வெளிநாட்டிலிருந்து வருகின்ற முதியோருக்கு விருந்தோம்பல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்கும் ஒரு தாற்பரியமாகவே இந்த உல்லாச விடுதி அமைந்துள்ளது. இலங்கையில் முதலாவதாக வைத்தியசாலையொன்றால் நிர்வகிக்கப்படுகின்ற சொகுசு வசதி கொண்ட தங்குமிடம் என்ற பெருமையை யாத்ரா கொண்டுள்ளது. இந்த முன்னோடி முயற்சியானது விருந்தோம்பல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகிய இரண்டையும் தங்குதடையின்றி ஒருங்கிணைத்து, முழுமையான, மற்றும் நிகரற்ற அனுபவத்துடன் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் முதியோருக்கு வழங்குவதற்கான உத்தரவாதத்தை அளிக்கின்றது. முதியோர் தமது பொன்னான காலங்களை சௌகரியத்துடனும், மனநிறைவுடனும் அனுபவித்து மகிழும் வகையில் மகிழ்ச்சிகரமான தருணத்தை அவர்களுக்கு அமைத்துத் தருவதே யாத்ராவின் நோக்கம்.