Thursday, May 9, 2024
Home » நியூமோனியா காய்ச்சலால் 29 வயது இளைஞர் உயிரிழப்பு

நியூமோனியா காய்ச்சலால் 29 வயது இளைஞர் உயிரிழப்பு

- வீட்டில் மயங்கி சரிந்த நிலையில் உயிரிழப்பு

by Prashahini
March 10, 2024 3:25 pm 0 comment

நியூமோனியா காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பாடசாலை வீதி, துன்னாலை வடக்கு, கரவெட்டியில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த 29 வயதான முத்துலிங்கம் சிவதர்ஷன் என்பவராவார்.

வாய் அவிச்சல் ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலை சில தினங்களுக்கு முன்னர் சிகிச்சை பெற்ற அவர் இன்று (10) அதிகாலை வீட்டில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு வைத்தியசாலை கொண்டுவரப்பட்டது.

பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

உடற்கூற்று பரிசோதனையில் நியூமோனியா தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT