110
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. அங்கத்தவர்களின், மீலாத் பரிசளிப்பு, மற்றும் அதிபர் கௌரவிப்பு நிகழ்வும், இம்மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை மாவனல்லை நாகூர்கம “திவ்மினி” மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வை.எம்.எம்.ஏ. சப்ரகமுவ பணிப்பாளர் எம்.கே.ஏ. லுக்மான் அவர்கள் தெரிவித்தார்கள். மாலை தீவு உயர்ஸ்தானிகர் கௌரவ பட்லி ஹிசாம் ஆதம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் அகில இலங்கை ரீதியாக, வை.எம்.எம்.ஏ யினால் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட மீலாத் விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், கேகாலை மாவட்ட ஓய்வு பெற்ற அதிபர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், இங்கு நடைபெறவுள்ளது.