மலர் போன்ற மனம் கொண்ட பூமாரி – மா
தலையெனும் நகர் வாழும் மாமாரி
சில்லுக்குள்ளும் உயிர் வாழும் சுகுமாரி –
கடுஞ் சினம் யாவும் மறக்கின்ற மாகாளி
ஆல் போல் குழல் கொண்ட ஓங்காரி
கலைஞான இசைஞான வேற்காரி
மலை மீது குடி வாழும் மஹாமாரி – அழகு மலை
அடி மீது குடிகொண்ட திரிசூலி
ஆனந்த கூத்தாடும் அபிராமி
அனைவருக்கும் துணையான சிவகாமி
அலைமோதும் மாந்தர் துயர் போக்கும்
அலங்காரி – அன்னை
அளவில்லா கண்கொண்ட முத்துமாரி
மாத்தளை மாநகருக்கு மகமாயி
மங்கள புகழ் சேர்ப்பாள் முத்துமாரி
மாந்தர் கூட்டத்திற்கு மனதார – கருணை
அருள் சேர்ப்பாள் மாத்தளை முத்துமாரி
தேரில் உலவிடுவாள் அன்னை முத்துமாரி
திரவியங்கள் தந்திடுவாள் முத்துமாரி
தமிழ் இசையை வளர்த்திடுவாள்
முத்துமாரி – அன்னை
மாதர் மாங்கல்யம் காத்திடுவாள் தங்க முத்துமாரி
திருமதி இந்ராதேவி
சிவலிங்கம் அதிபர்
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அறநெறிப் பாடசாலை