Sunday, April 28, 2024
Home » மாதர் மாங்கல்யம் காத்தருள்வாள் முத்துமாரி

மாதர் மாங்கல்யம் காத்தருள்வாள் முத்துமாரி

by Gayan Abeykoon
February 23, 2024 1:00 am 0 comment

மலர் போன்ற மனம் கொண்ட பூமாரி – மா

தலையெனும் நகர் வாழும் மாமாரி

சில்லுக்குள்ளும் உயிர் வாழும் சுகுமாரி –

கடுஞ்  சினம் யாவும் மறக்கின்ற மாகாளி

ஆல் போல் குழல் கொண்ட ஓங்காரி

கலைஞான இசைஞான வேற்காரி

மலை மீது குடி வாழும் மஹாமாரி – அழகு மலை

அடி மீது குடிகொண்ட திரிசூலி

ஆனந்த கூத்தாடும் அபிராமி

அனைவருக்கும் துணையான சிவகாமி

அலைமோதும் மாந்தர் துயர் போக்கும்

அலங்காரி – அன்னை

அளவில்லா கண்கொண்ட முத்துமாரி

மாத்தளை மாநகருக்கு மகமாயி

மங்கள புகழ் சேர்ப்பாள் முத்துமாரி

மாந்தர் கூட்டத்திற்கு மனதார – கருணை

அருள் சேர்ப்பாள் மாத்தளை முத்துமாரி

தேரில் உலவிடுவாள் அன்னை முத்துமாரி

திரவியங்கள் தந்திடுவாள் முத்துமாரி

தமிழ் இசையை வளர்த்திடுவாள்

முத்துமாரி – அன்னை

மாதர் மாங்கல்யம் காத்திடுவாள் தங்க முத்துமாரி

 

திருமதி இந்ராதேவி

சிவலிங்கம்  அதிபர் 

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான  அறநெறிப் பாடசாலை   

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT