Home » கல்முனை மாநகரில் இன்று முத்துச்சப்ரத்தில் பவனி வரும் விநாயகப் பெருமான்

கல்முனை மாநகரில் இன்று முத்துச்சப்ரத்தில் பவனி வரும் விநாயகப் பெருமான்

by Gayan Abeykoon
February 23, 2024 1:00 am 0 comment

கல்முனை மாநகர் அருள்மிகு தரவைச் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் பதினோராம் நாளான இன்று ( 23) முத்துச்சப்பரத் திருவிழா இடம்பெறு கிறது. இன்று பிற்பகல் 4:30 மணி அளவில் வீதி உலா வரும் விநாயகப் பெருமான், யானைகள் முன்னே அணிவகுத்து செல்ல, முத்துச்சப்பரத்தில் வலம்  வந்து  அடியார்களுக்கு அருளாசி  வழங்குவார்.

இந்துக்களின் கலை, கலாசாரங்களை பிரதிபலிக்கும் நிகழ்வுகளும் இந்த முத்துச்சப்பர பவனியின்போது இடம்பெறும்.கல்முனை மாநகர்  ஸ்ரீ தரவைச் சித்தி  விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோ ற்சவம் கடந்த (13)இல்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த விழாவில் நாளை (24)   தீர்த்தோற்சவம் நடைபெற்று, உற்சவம் இனிதே நிறைவுறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT