Thursday, May 9, 2024
Home » புதிய கூட்டணியின் இரண்டாவது கூட்டம் சனிக்கிழமை கொழும்பில்

புதிய கூட்டணியின் இரண்டாவது கூட்டம் சனிக்கிழமை கொழும்பில்

- கிழக்கு மாகாணம், கொழும்பு அரசியல் பிரபலங்கள் மேடையேறவுள்ளதாக தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
February 22, 2024 12:46 pm 0 comment

“வலுவான பொருளாதாரம் – வெற்றிகரமான பயணம்” எனும் தொனிப்பொருளின் கீழ் ‘புதிய கூட்டணி’ இனால் நடத்தப்படும் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தில் ‘புதிய கூட்டணி’ இன் கொழும்பு மாவட்டத் தலைவர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெனாண்டோ, கூட்டணியின் செயற்பாட்டுத் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா, புதிய கூட்டணி ஸ்தாபகர் நிமல் லான்சா, பிரியங்கர ஜயரத்ன, சுகீஸ்வர பண்டார ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பிரபலமான அரசியல்வாதிகள் இணையவுள்ளதாக புதிய கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சில மேதைகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆலோசனை வழங்கி நாட்டை வீழ்த்தினர்

‘புதிய கூட்டணி’ உடன் இணைந்த ஸ்ரீ லங்கா ஐக்கிய முன்னணி கட்சி

71 எம்.பிக்களுடன் ‘புதிய கூட்டணி’ ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT