சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் பாரிய பொருளாதார ஆபத்து ஏற்படலாமென, இலங்கை மத்திய வங்கி தெரிவித்தது.
உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருவதாகத் தெரிவித்த மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம் புரண்டால் பாரிய பொருளாதார ஆபத்து ஏற்படலாமெனவும் தெரிவித்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துக்கு ஏதேனும் இடையூறு ஏற்படும் பட்சத்தில் நம்பிக்கையின்மை, முதலீட்டாளர்களின் எதிர்மறை உணர்வுகள் காரணமாக பாரிய பொருளாதார இழப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்குமெனவும், மத்திய வங்கி தெரிவித்தது. இலங்கை தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளதுடன், பொருளாதார நடவடிக்கைகள் மீட்டெடுக்கப்படுகின்றன. எனினும் குறுகிய காலத்துக்கு வளர்ச்சி குறைவானதாகவே காணப்படுமெனவும், மத்திய வங்கி தெரிவித்தது.