முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தண்ணிமுறிப்பு குளத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கி வெடித்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
வேட்டைக்கு சென்ற நபர் காட்டுக்குள் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் அவருடன் வேட்டைக்கு சென்றவர்களால் எடுத்துவரப்பட்டார். எனினும் அவர் பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இவர் பயன்படுத்திய சட்டவிரோத துப்பாக்கி மற்றும் உயிரிழந்தவரின் சடலம் என்பன தண்ணிமுறிப்பு குளக்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)