Home » தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இருவர் மரணம்

தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இருவர் மரணம்

by Prashahini
February 14, 2024 3:43 pm 0 comment

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு பகுதிதை சேர்ந்த இருவர் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (14) சிறியால் ஓடை பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கிண்ணியா ஈச்சந்தீவு சின்னத்தோட்டம் பகுதியை சேர்ந்த 17 வயதான ஆயிஸ் ரூபன் மற்றும் 42 வயதான புஷ்பகுமார் எனவும் தெரியவருகிறது.

உயிரிழந்தவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஏ.எச் ஹஸ்பர் 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT