239
பலளுவெவ ரொலெக்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில் பெயார் போயிஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
பலளுவெவ பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்தத் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்றதோடு இறுதிப் போட்டியில் ஈ.எஸ்.டி.ஏ. அணியை பெயார் போயிஸ் அணி 10 ஓட்டங்களால் வீழ்த்தியது. தொடர் நாயகனாக நெல்லியகம ஹெட்ரிக்ஸ் அணியின் நாசர் தெரிவு செய்யப்பட்டதுடன் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக கசுன் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார்.
கல்நேவ தினகரன் விசேட நிருபர்