Saturday, April 27, 2024
Home » ரூ. 10 கோடிக்கும் அதிக 192,000 போதைமாத்திரைகளுடன் கைது

ரூ. 10 கோடிக்கும் அதிக 192,000 போதைமாத்திரைகளுடன் கைது

- பதுளை பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர்

by Rizwan Segu Mohideen
February 3, 2024 9:36 am 0 comment

‘யுக்திய’ சுற்றிவளைப்பில், ரூ. 10 கோடிக்கும் அதிக பெறுமதியான ‘Pregablin’ எனப்படும் 192,000 போதைமாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வத்தளை, எந்தரமுல்லை பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த போதைமாத்திரைகளை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து 192,000 எண்ணிக்கையிலான Pregablin 150mg மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் பதுளை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் மேலதிக விசாரணைகளுக்காக எடரமுல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT