Monday, April 29, 2024
Home » சுன்னாகத்தில் கோழி வளர்ப்பால் கலவரம்; கத்திக்குத்தில் ஒருவர் பலி

சுன்னாகத்தில் கோழி வளர்ப்பால் கலவரம்; கத்திக்குத்தில் ஒருவர் பலி

by Gayan Abeykoon
February 1, 2024 1:33 am 0 comment

யாழ்ப்பாணத்தின் சுன்னாகம், கந்தரோடைப் பிரதேசத்தில் கோழி வளர்ப்புத்  தொடர்பாக  நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (30) ஏற்பட்ட கலவரம் காரணமாக  ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தரோடையைச் சேர்ந்த 36 வயதுடைய சந்திரநாதன் கோபிராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கொலைச் சந்தேக நபரான 57 வயதுடைய அயலவர் ஒருவரை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

கோழி வளர்ப்புத் தொடர்பாக  உறவினர்களான அயலவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் அது கொலையில் முடிவடைந்ததாகத் தெரிவித்த பொலிஸார்,  கோழி வளர்ப்புத் தொடர்பாக இவர்களுக்கு இடையில் பிரச்சினை  நிலவி வந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் சுன்னாகம் பொலிஸார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக  சுன்னாகம் பொலிஸார் மேலதிக  விசாரணையை  மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT