ஐக்கிய மக்கள் சக்தி கட்சிய முன்னெடுத்த பேரணியின் போது சுகவீனமுற்ற முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று (30) பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்கா அருகில் முன்னெடுத்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளருமான முஜிபுர் ரஹ்மான் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டகண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் – 2024” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்திருந்த குறித்த பேரணியைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தார்.
இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கொழும்பு தேசிய வைத்தியாசலையில் நலன் விசாரித்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம்; முதுகெலும்பு இருந்தால் தேர்தலை நடத்துங்கள்!
ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பேரணிக்கு நீதிமன்றங்களின் உத்தரவு