120
மன்னார் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த சூரியப் பொங்கல் விழாவும் உழவர் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று புதன்கிழமை (17) காலை 9.30 மணியளவில் அம்மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இதற்கான நிகழ்வுகள் நடைபெற்றன. நடனம், சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன.
இதன் பின்னர் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட உழவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், மேலதிக மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(மன்னார் குறூப் நிருபர் )