Home » யாழ்.கீரிமலையில் மாட்டின் தலையுடன் இளைஞன் கைது

யாழ்.கீரிமலையில் மாட்டின் தலையுடன் இளைஞன் கைது

by Prashahini
January 13, 2024 12:45 pm 0 comment

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் மாட்டின் தலையுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

கீரிமலை பகுதியில் மாடொன்றை சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்குவதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது , சம்பவ இடத்தில் மாட்டின் தலையுடன் நின்ற இளைஞனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து, வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் மாட்டிறைச்சியுடன் தப்பி சென்ற ஏனைய நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT