Sunday, May 5, 2024
Home » வவுனியா, முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு

வவுனியா, முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு

சந்நிதியான் ஆசிரமத்தால்

by gayan
January 13, 2024 12:46 pm 0 comment

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆசிரமத்தால் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 123 குடும்பங்கங்களுக்கான ரூபா 615,000 பெறுமதியான உலர் உணவு பொதிகள் கடந்த புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதில் முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மாமூலை – கிராம சேவையாளர் பிரிவில் 52 குடும்பங்களுக்கும், வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோவில்புளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் 35 குடும்பங்களுக்கும், கணேசபுரம் கிராம சேவையாளர் பிரிவில் 36 குடும்பங்களுக்குமே உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த உலர் உணவு நிவாரணத்தை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், தொண்டர்கள், சமூக செயற்பாட்டாளர் இ.தயாபரன், கோவில் புளியங்குளம் கிராம சேவகர் சர்வேந்திரன், முன்னாள் வெங்கல செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் வெங்கள செட்டிகுளம் சு.ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர் ம.சுஜேந்நிரன் ஆகியோர் சென்று வழங்கி வைத்தனர்.

(கரவெட்டி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT