Saturday, May 18, 2024
Home » யாழில் விலங்குகளை அறுக்கும் சட்டவிரோத தொழுவம்; 21 மாடுகள், 4 ஆடுகள் மீட்பு

யாழில் விலங்குகளை அறுக்கும் சட்டவிரோத தொழுவம்; 21 மாடுகள், 4 ஆடுகள் மீட்பு

- இறைச்சியாக்கிக் கொண்டிருந்த நபர் கைது

by Prashahini
May 5, 2024 12:14 am 0 comment

யாழ்ப்பாணத்தில சட்டவிரோதமாக விலங்குகளை அறுக்கும் தொழுவம் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 21 மாடுகளையும், 04 ஆடுகளையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு தொகை இறைச்சியும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாடு , ஆடுகள் இறைச்சியாக்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவல்களை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர்.

அதன்போது குறித்த கட்டடத்தில் இறைச்சியாக்கிக் கொண்டிருந்த நபரை கைது செய்ததுடன், இறைச்சிக்காக கொண்டு வரப்பட்டிருந்த 21 மாடுகள் மற்றும் 04 ஆடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன், ஒரு தொகை இறைச்சி மற்றும் இறைச்சியாக்க பயன்படுத்திய கோடரி , கத்திகள் உள்ளிட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் ஆடு , மாடுகள் கடத்தப்படுவதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், உயிருடன் மீட்கப்பட்ட ஆடுகள், மாடுகள் களவாடப்பட்டவையா? எனவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT