147
ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரிகளுக்கு இடையிலான “பழுப்பு நிறங்களின் சமர்” வருடாந்த கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மார்ச் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
இம்முறை போட்டியின் முக்கிய அம்சமாக பழுப்பு நிறங்களின் சமருக்கான உத்தியோகபூர்வ சின்னம் 15 ஆண்டுகளின் பின்னர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, எஸ்.எஸ்.சியில் நேற்று முன்தினம் (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1924 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த இரு பாடசாலைகளுக்கும் இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அஷ்ரப் ஏ சமத்