கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தலைமையிலான குழு கடந்த செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை வலயத்துக்கு கொட்டும் மழைக்கு மத்தியில் விஜயம் செய்தது.
அங்கு அவருடன் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் ஜவாத் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டனர். முதலில் சம்மாந்துறை வலயக் கல்வி பணிமனை கல்வி சார் உத்தியோகத்தர்கள் உடனான இந்த சந்திப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் ெடாக்டர் உமர் மௌலானா தலைமையில் நடைபெற்றது. அதில் பிரதி உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அதிபர்களுக்காக கூட்டம் இடம்பெற்றது. எதிர்வரும் க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றும் மாணவர்களை மையமாகக் கொண்டு இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. கடந்த ஐந்து வருட கால பெறுபேற்று பகுப்பாய்வு, எதிர்பார்க்கின்ற பொதுப்பரீட்சை எதிர்பார்ப்பு பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கான காணொளி சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அங்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.
வி.ரி.சகாதேவராஜா