Monday, April 29, 2024
Home » உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

by Gayan Abeykoon
January 4, 2024 7:09 am 0 comment

மட்டக்களப்பில் கடும் மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரிய குளமாக விளங்கும் உன்னிச்சை குளம் 33 கன அடி நீரினை கொள்ளவாக கொண்டுள்ளது. இந்நிலையில் கடும் மழை காரணமாக நீர் வான் பாய்வதனால் குளத்தின் 3 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்டுள்ளமையால் அப்பிரதேச விவசாய நிலங்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைமை காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளதுடன் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

அத்துடன் உன்னிச்சை குளம் திறக்கப்பட்டுள்ளமையினால் வவுணதீவு – ஆயித்தியமலை பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT