யாழ்.மாநகரசபையின் 75 ஆவது ஆண்டு பவளவிழா நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை யாழ்.மாநகரசபை முன்றலில் யாழ்.மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் கடந்த 75 ஆண்டுகளில் யாழ்.மாநகரசபையில் பணியாற்றிய 28 கெளரவ முதல்வர்கள் 17ஆணையாளர்களில் தற்போது வாழ்ந்து வரும், 04 மாநகரசபை முதல்வர்கள், 06ஆணையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
மாநகரசபை முதல்வர்களாக தெரிவான செல்லன் கந்தயன், ப.யோகேஸ்வரி பற்குணராஜா, இமானுவேல் ஆர்னல்ட் மற்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர்களுக்கும் ஆணையாளராக கடமை புரிந்த சி.வி.கே.சிவஞானம், வே.பொ.பாலசிங்கம், மற்றும் பொ. வாகீசன் ஆகியோர் நினைவு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அதேவேளை மூன்று ஆணையாளர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் சமூகம் தரவில்லை எனத்தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்.மாநகர சபை பிரதி ஆணையாளர்
வே.ஆயகுலன், செயலாளர் த.தயாளன், பிரதம கணக்காளர் திருமதி.ம.வசந்தமாலா உள்ளிட்ட மாநகரசபை பதவிநிலை அதிகாரிகள், சுகாதார , உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(யாழ்.விசேட நிருபர்)