Sunday, May 19, 2024
Home » க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசில்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசில்

மே 22க்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தல்

by mahesh
May 8, 2024 6:00 am 0 comment

– பிரிவெனா, பெண்பிக்குனி கற்கை நிறுவகங்களில் கற்கும் பிக்கு, பிக்குனி மாணவர்கள் உள்ளிட்ட மாணவர்களுக்கும் வழங்க ஏற்பாடு
– தற்போது வழங்கப்படுவதற்கு மேலதிகமாகவே ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய புதிதாக இரண்டு புலமைப்பரிசில் திட்டங்கள் அறிமுகம்

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய க.பொ.த உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்கள் உட்பட பிரிவெனா கற்கை நிறுவகங்களில் கற்கும் பிக்கு, பிக்குனி மாணவர்களுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் ஜனாதிபதி நிதியத்தினால் மேலும் இரண்டு புலைமைப் பரிசில் திட்டங்கள் இம்மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இத்திட்டத்துக்காக எதிர்வரும் 22க்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு ஜனாதிபதி நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. இவ்வேலைத்திட்டம் இம்மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

உயர்தரத்துக்கு தெரிவாகி தகவல் தொழில்நுட்ப பாடங்களை கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை தொலைத் தொடர்பாடல்கள் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பின் கீழ், ஜனாதிபதி நிதியம் இந்த புலைமைப்பரிசிலை வழங்கவுள்ளது.

சகல கல்வி வலயங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ள இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ், வலயமொன்றில் குறைந்தபட்சமாக 50 மாணவர்களுக்கு இது, வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தெரிவு செய்யப்படும் மாணவ மாணவிகளுக்கு 2022 / 23ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி முதல் க.பொ.த

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய விண்ணப்பதாரிகளுக்கு 24 மாதங்களுக்கு 6,000 ரூபா வழங்கப்படும்.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களை www.facebook.com/president.fund உத்தியோகபூர்வ Face Book பக்கம் மற்றும் www.presidentsfund.gov.lk இணையத்தளம் , கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளமான www.moe.gov.lk, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழுவின் இணைய பக்கத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

அத்தோடு, 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட கொள்கைப் பிரகடன உரைக்கு அமைவாக, 2024 ஆம் ஆண்டுக்குள் பாடசாலை மாணவர்களுக்கான பல புலைமைப் பரிசில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் 2022/2023 க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து, உயர் தரத்திற்கு தெரிவான மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரையில் 6,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

தற்போதும் இந்த புலைமைப்பரிசில் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 6,000 மாணவர்களின் விவரம் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ Face Book பக்கத்திலும் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்காக 2024 ஆம் ஆண்டிலிருந்து புலமைப் பரிசுத் தொகை நிலுவை தொகையுடன் சேர்த்து வழங்கப்படவுள்ளது.

அதேநேரம் கல்விச் செயற்பாடுகளுக்காக பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் 01 – 11 தரம் வரையிலான 1,00,000 பிள்ளைகளுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைபரிசில் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலிருக்கு 10,126 பாடசாலைகளை உள்வாங்கி ஒரு பாடசாலைக்கு குறைந்த பட்சமாக 04 புலமைப் பரிசில்களும் அதிகட்சமாக 04 புலமைப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. 1,00,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா என்ற அடிப்படையில் வழங்குவதற்கான வேலைத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போதும் விண்ணப்பதாரர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பதாரர்களின் தகவல்கள் வலயக் கல்வி அலுவலங்களூடாக ஜனாதிபதி நிதியத்துக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், தரவுகள் முழுமையாக கணினி மயப்படுத்தப்பட்ட பின்னர் மாணவர்களுக்காக திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு புலமை பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் (SMS) ஊடாக அறிவிக்கப்படும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT