கொரோனா புதிய திரிபு மற்றும் ஒரு வகை காய்ச்சல் பரவல்தொடர்பில் தகவல்கள் வெளிவரும் நிலையில் மீண்டும் முகக் கவசத்தை அணிவது சிறந்தது என்றும் அவ்வாறு அணிவதில் தவறில்லை என்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
கொரோனா புதிய திரிபு தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள அமைச்சர் தடுப்பூசி வேலைத்திட்டம் மூலம் மக்கள் மத்தியில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவிய கொரோனா தொற்று பரவல் காலங்களில் முகக்கவசத்தை அணிவதன் மூலம் சுவாசம் தொடர்பான பல நோய்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள மக்களால் முடிந்துள்ளது என்பதையும் அமைச்சர் சுட்டி காட்டியுள்ளார்.
அவ்வாறு முகக் கவசத்தை மக்கள் கண்டிப்பாக அணிந்த காலகட்டத்தில் சுவாசம் தொடர்பான நோய் நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் காணப்பட்டதாகவும் அந்த வகையில் மீண்டும் முகக் கவசத்தினை அணிவது சிறந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்