Monday, April 29, 2024
Home » சுமையேற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ள கில்கிட் பாகிஸ்தானில் போராட்டங்கள் அதிகரிப்பு

சுமையேற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ள கில்கிட் பாகிஸ்தானில் போராட்டங்கள் அதிகரிப்பு

by Rizwan Segu Mohideen
December 25, 2023 11:12 am 0 comment

கில்கிட் பாக்கிஸ்தான் என்பது சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு கஷ்மீர் பகுதியின் ஒரு பகுதியாகும். அங்கு வசிக்கும் மக்களுக்கு ஆளுகை மற்றும் கொள்கை உருவாக்கும் செயல்முறைகளில் பிரதிநிதித்துவம் கிடையாது. சமீப காலங்களில், நிர்வாகத்திற்கு எதிராக பாரிய எழுச்சிகள் ஏற்பட்டுள்ளன, மேலும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கில்கிட் பாகிஸ்தான் மேலும் போராட்டங்களை முகங்கொடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரதேசம் கடுமையான சுமை ஏற்றங்களினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு, உள்ளூர் மக்களுக்கு இயல்பான வாழ்க்கையை நடத்துவது கடினமாக உள்ளது. அதிக மின் கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாகிவிட்டதால், மக்கள் இரட்டிப்புச் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த உள்ளாட்சி நிர்வாகம் முன்வராததால், இந்த நிலைமை மேலும் அதிகரித்துள்ளது. சமீபத்தில், பல ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுக் கல்வி நிறுவன மாணவர்கள் கில்கிட் பாகிஸ்தானில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச கல்வி நிறுவனங்களில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய பிறகு குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படவில்லை என ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் பாகிஸ்தானில் மின்சார விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது, இதன் விளைவாக பரவலான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில் கோதுமை மா மற்றும் பிற தேவைகளுக்கு அதிக வரி விதிக்கப்படுவதால் மக்கள் அவதிப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குளிர்காலத்தில் இப்பகுதி கடுமையான குளிரை எதிர்கொள்வதால், சுமை உயர்வு பிரச்சினை முக்கியமானது. மேலும் சீரான மின்சாரம் வழங்கப்படாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக பிரபல உள்ளூர் பத்திரிகையான பாமிர் டைம்ஸ் சமீபத்தில் கூறியது, “தொலைதூர பள்ளத்தாக்குகள் மற்றும் தொலைதூர பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. டீசல் ஜெனரேட்டர்கள், மண்ணெண்ணெய் அல்லது இயற்கை எரிவாயு எரியும் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், “கடந்த 15 ஆண்டுகளாக எந்த அரசாங்கமும் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முடியாததால் மக்கள் உண்மையான சிரமத்தில் உள்ளனர், மேலும் எதிர்காலத்தில் அத்தகைய நம்பிக்கைகள் மக்களுக்கு இலல்லை ” என்று மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாமிர் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் 80% பேர் தங்கள் பகுதிகள் 20 மணிநேரம் வரை அல்லது அதற்கு மேல் சுமை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும், “கில்கிட்-பாகிஸ்தான் தண்ணீர், சூரிய ஒளி மற்றும் காற்று உள்ளிட்ட இயற்கையின் கூறுகளில் மின்சாரம் தயாரிக்கும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. பிராந்தியத்தில் ஏராளமாக கிடைக்கும் இந்த வளங்களில் எதையும் பயன்படுத்த மத்திய மற்றும் பிராந்திய அரசாங்கம் தவறிவிட்டன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

“பிராந்தியத்தில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், பிராந்தியத்தில் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான நிலையான பொறிமுறையை உருவாக்கத் தவறிவிட்டது. ஜனரஞ்சக சொற்பொழிவுகள் அல்லது தந்திரோபாயங்கள் பெரும்பாலும் கிளர்ச்சியடைந்த மக்களை அடக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன . முறையற்ற மின் வினியோகத்தால், இந்தப் பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஹபாதிக்கப்பட்டுள்ளன.

சுமை அதிகரிப்பு மற்றும் உயர் பணவீக்கத்திற்கு மத்தியில், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாமல் திணறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. (ஏசியன் லைட் செய்தி)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT