Home » பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைமாத்திரை விற்பனை

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைமாத்திரை விற்பனை

- 300 போதை மாத்திரைகளுடன் வியாபாரி கைது

by Prashahini
December 22, 2023 8:30 am 0 comment

புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவர்களையும், இளைஞர்களையும் இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரம் செய்து வந்த முக்கிய சந்தேகநபர் 300 போதை மாத்திரைகளுடன் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆடைதொழிற்சாலை ஊழியர்களை இலக்கு வைத்து குறித்த சந்தேகநபர் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்று (21) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் 300 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை பொலிஸார் கைது செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு நேசன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு போதை மாத்திரையின் விலை 250 ரூபாய் விற்கு நகர் பகுதியில் இவர் விற்பனை செய்து வந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் புதுகுடியிருப்பு பகுதியில் பல்வேறுபட்ட இடங்களில் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரையும் போதை மாத்திரைகளையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முறபடுத்தவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

ஓமந்தை விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT