Wednesday, May 8, 2024
Home » தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் அருளுரைக்காக இலங்கை விஜயம்

தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் அருளுரைக்காக இலங்கை விஜயம்

by mahesh
December 13, 2023 1:50 pm 0 comment

தமிழ் நாடு திருஞானசம்பந்தர் திருமடத்தைச் சேர்ந்த திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீனம் ஸ்ரீ கார்யம் வாமதேவ தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் நேற்று (12) கொழும்பு வந்து சேர்ந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுவாமிஜியை மலையக சிவன் அருள் அமைப்பின் இணைப்பாளரான அ. அருளாநந்தம் வரவேற்று ஆசிபெற்றார்.

தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் இன்று (13) பிற்பகல் 2.00 மணிக்கு திருகோணமலை, வீரமா நகர் நாகதம்பிரான் ஆலயத்திலும், வியாழக்கிழமை (14) காலை 9.00 மணிக்கு நீனாக்கேணி சிவனருள் கல்வி நிலையத்திலும், பிற்பகல் 2.00 மணிக்கு சேனையூர் மத்திய கல்லூரியிலும், வெள்ளிக்கிழமை (15) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு, பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையிலும், மாலை 5.00 மணிக்கு இராமகிருஷ்ண மிஷனிலும், சனிக்கிழமை (16) காலை 9.00 மணிக்கு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும், மாலை 4.30 மணிக்கு மண்டூர் இராமகிருஷ்ண மிஷனிலும் சுவாமிகளின் ஆன்மீக அருளுரைகள் நடைபெறவுள்ளன. தமிழகத்திலிருந்து வருகை தரும் சுவாமி அவர்களின் காலை, மாலை நடைபெறும் இப் புனித நிகழ்வுகளில் கலந்து கொண்டு இறையருள் பெறுவதோடு சுவாமிகளின் அருளாசிகளையும் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT