உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச தலைவர் டாக்டர் எஸ்.எம். ரஷ்மீரூமி மற்றும் அவரது குழுவினர், இலங்கையின் முன்னனி கல்வி நிறுவனமான IDM nations campus international இன் உரிமையாளர் கலாநிதி V.ஜனகனுடன் (09) கல்வி நிறுவனத்தில் வைத்து சினேகபூர்வமான சந்திப்பை மேற்கொண்டனர். இச்சந்திப்பின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உயர் கல்வி தொடர்பான விடயங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், கலாநிதி V. ஜனகனினால், அவருடைய Win mind புத்தகமும் அனைவருக்கும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் IDM Nations Campus International கல்வி நிறுவனத்தின் சர்வதேச செயற்பாடுகளுக்கான சமூக நலத்துறைக்கான பணிப்பாளர் அருட் கலாநிதி எஸ்.சந்துரு பெர்னாண்டோவும் கலந்து கொண்டார்.