களுத்துறை மாவட்டத்திலுள்ள வெலிப்பன்னை மீலாத் கமிட்டியும் நூருத் தீனிய்யாஹ் நிர்வாகமும் இணைந்து நடத்திய மாபெரும் மீலாதுன் நபி விழா மற்றும் பரிசளிப்பு வைபவம் வெலிப்பன்னை ரஹ்மானிய்யா மஹா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
வெலிப்பன்னையிலுள்ள பண்ணிரண்டு குர்ஆன் மத்ரஸாக்களை ஒன்றிணைத்து நடாத்தப்பட்ட இவ்விழாவில் மாணவர்களின் கிராஅத், தர்ஜுமதுல் குர்ஆன், ஹதீஸ், சந்தர்ப்ப துஆ, பேச்சு, உரையாடல், கஸீதா, வில்லுப்பாட்டு மற்றும் இஸ்லாமிய கலை, கலாசார நிகழ்ச்சிகள் என்பன மேடையேற்றப்பட்டன.
மீலாத் சன்மார்க்க அறிவுப் போட்டிகளில் வெறீறியீட்டிய சிறார்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவின் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட். ஏ.எம் பைஸால் கலந்து சிறப்பித்ததுடன் விஷேட பேச்சாளர்களாக பாணந்துறை ஊர்மணை அல்முபாரக் தக்கியாவின் மௌலவி முஹம்மத் இர்ஷாத் ஆலிம் (முஸ்தபவி) மற்றும் பலப்பிட்டி அஹதிய்யா பாடசாலை அதிபர் மௌலவி முஹம்மத் நஸ்மி ஆலிம் (முஸ்தபவி) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவிற்கு அதிபர் முஹம்மத் நௌமான், மத்துகம பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம் ரம்ஸான், நூருத்தீனியா பொறுப்பாளர் எஸ்.எச்.எம் இல்யாஸ் மற்றும் முன்னாள் அதிபர்கள், குர்ஆன் மத்ரஸாக்களின் அதிபர்கள், விரிவுரையாளர்கள் பல்துறைகளையும் சார்ந்த பெருமக்கள், ஆசிரியர்கள், உலமாக்கள், பள்ளிவாசல்கள் தக்கியாவின் பொறுப்பாளர்கள், ஊர் மக்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பேருவளை பீ.எம். முக்தார்