‘எந்த ஊர் (மக்கள்)களை நாம் அழித்து விட்டோமோ அவர்கள் நிச்சியமாக (உலகிற்குத்) திரும்ப மாட்டார்கள் என்பது விதியாகி விட்டது’.
(அல்குர்ஆன் – 21:95)
இங்கு முதலாவது வசனத்தில் எந்த ஊர்காரர்களை நாம் அழித்து விட்டோமோ அவர்கள் நிச்சயமாக (உலகத்திற்கு) திரும்ப மாட்டார்கள் என்பது விதியாகி விட்டது என உயர்ந்தோன் அல்லாஹ் கூறி இருக்கின்றான். இங்கு விதியாகி விட்டதை குறிக்க மூலத்தில் ஹராம் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பது நேரடி பொருளாகும்.
இன்னும் அப்பாஸ் (ரழி) அவர்கள் உறுதியாக்கி விட்டது வாஜிப் என பொருள் கூறினார்கள்.
(ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி)
உலக முடிவு காலத்தில் ஈசா (அலை) அவர்கள் பூமியில் இறங்குவார்கள். அப்போது ஈசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ், நான் என் அடியார்கள் சிலரை வெளிவரச் செய்துள்ளேன் அவர்களுடன் போரிட உம்மால் இயலாது. எனவே (முஸ்லிமான) நூர் மழைக்கு அழைத்து சென்று அவர்களைப் பாதுகாப்பாக வைப்பீராக…
பின்னர் அல்லாஹ் ‘யஃஜுஜ் மஃஜுஜ்’ கூட்டத்தாரை அனுப்புவான். இதையே அல்லாஹ் ஒவ்வொரு மேட்டிலும் அவர்கள் (விளங்கிக் கொண்டு) வெளியேறுவார்கள் என்று கூறி இருக்கின்றான். பிறகு இதை ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (உதவி கேட்டு) இறைஞ்சுவார்கள் அப்போது யாஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினரின் பிடரிகளில் புழுக்களை அல்லாஹ் அனுப்புவான்.
அதனால் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தாக மரணமடைவார்கள். பின்னர் இறை தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (மலையிலிருந்து) இறங்கி வருவார்கள்.
அப்போது பூமியில் எல்லா இடமும் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரின் பிரேதங்களிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் நிரம்பி இருப்பதையே காண்பார்கள். உடனே இறைதூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் அல்லாஹ்விடம் அவற்றை அகற்றக் கோரி இறைஞ்சுவார்கள். பின்னர் அல்லாஹ் நாற்பது நாட்கள் மழைபெய்யச் செய்தான். அந்த மழை எந்த மண் வீட்டிலும் கம்பளியான எந்த வீட்டிலும் பொழியாமல் இராது. இறுதியில் பூமியைக் கழுவி கண்ணாடி போன்று சுத்தமாக்கிவிடும். பின்னர் பூமிக்கு நீ உன் கனிவர்க்கங்களை முளைக்கச் செய்வாயாக. உன்னிடமுள்ள வளங்களை மறுபடியும் தருவாயாக என்று அவர் இறைஞ்சுவார்.
அன்றைய நாளில் எந்தளவுக்கு வளங்கள் கொடுக்கப்படும் எனில் பலர் சேர்ந்து ஒரேயொரு மதுபானத்தை உண்பர். அதன் மேற்புற ஓடு அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும்.
இந்நிலையில் வல்லமை மாண்புமிக்க அல்லாஹ் தூய்மையான காற்றொன்றை அனுப்புவான். அது அவர்களின் அக்குள்களுக்கு கீழ் நுழைந்து அவர்களை பிடித்துக் கொள்ளும். இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் உயிரையும் அது கைப்பற்றும். இதையடுத்து மக்களில் தீயவர்கள் மட்டுமே பூமியில் எஞ்சியிருப்பார்கள்.
கலாநிதி
தம்பி சாஹிப் சித்தி பரீதா…
புத்தளம் வீதி, சிலாபம்.