102
அகில இலங்கை சிறுவர் சித்திரப் போட்டியில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனைக்குட்பட்ட இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் அப்துல் முனாப் பாத்திமா நுஸைபா கிழக்கு மாகாண மட்டபோட்டியில் பங்குபற்றி முதலிடத்தை பெற்றுள்ளார். இதன்மூலமாக இவர் தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார். இவர் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் சித்திர பாட வளவாளராக சேவையாற்றும் இறக்காமத்தைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ.முனாவ்வின் புதல்வியாவார்.
( காரைதீவு குறூப் நிருபர்)