யாழ்ப்பாணம், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தை முன்னிலைப்படுத்திய இணையத்தள சேவையை ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகனர் நேற்று செவ்வாய்க்கிழமை (07) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
சமய, சமூகப் பணிகளில் ஏனைய ஆலயங்களுக்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்துவரும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான இணையத்தள சேவையினூடாக ஆலய பூஜைகள், நிகழ்வுகள் மற்றும் சமூகநலத் திட்டம் தொடர்பான முழு விபரங்களையும் உலகெங்கிலுமுள்ள அனைவரும் அறிந்துகொள்ள முடியுமென, ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அத்துடன், சமூகநலத் திட்டங்கள் தேவைப்படுவோருக்கு உரிய முறையில் திட்டங்கள் சென்றடைய வழிவகுக்குமெனவும், ஆலய நிர்வாகத்தினர் மேலும் தெரிவித்தனர்.
பு.கஜிந்தன்