Friday, May 3, 2024
Home » புதுமாத்தளன் கடற்கரையில் கரையொதுங்கிய 22Kg கஞ்சா

புதுமாத்தளன் கடற்கரையில் கரையொதுங்கிய 22Kg கஞ்சா

பொலிஸார் தீவிர விசாரணை

by mahesh
November 8, 2023 10:20 am 0 comment

முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்கரையில் 22 கிலோகிராம் நிறை கொண்ட கஞ்சாப் பொதிகள் கரையொதுங்கிய போது, அவற்றை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (07) காலை மீட்டுள்ளனர்.

இது தொடர்பாக நேற்றுக் காலை 6.30 மணியளவில் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, உரிய இடத்துக்குச் சென்ற அவர்கள் கஞ்சா பொதிகளை அவதானித்து, முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர். இதுவரை 11 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், கடற்கரையில் சோதனை தொடர்வதாகவும் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள கஞ்சா பொதிகளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார், கடற்றொழிலாளர் சிலரிடமும் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

ஓமந்தை விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT