நாடு தழுவியரீதியில் 17 அரச பல்கலைக்கழகங்களிலும் இன்று (02) அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதோடு, பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்புப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மதியம் 12.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
சம்பளப் பிரச்சினைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியில் உள்ள குறைவு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்றைய தினம் (01) நாவலவிலுள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் அரச சேவை தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் என்பன இணைந்து நடாத்திய கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் டிலக்சன் – யாழ்ப்பாணம்