Sunday, April 28, 2024
Home » மீண்டும் ‘பலொன் டியோர்’ விருதை வென்றார் மெஸ்ஸி

மீண்டும் ‘பலொன் டியோர்’ விருதை வென்றார் மெஸ்ஸி

by mahesh
November 1, 2023 9:34 am 0 comment

ஆர்ஜன்டீன மற்றும் இன்டர் மியாமி அணியின் முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி ஆடவருக்கான பலொன் டியோர் விருதை எட்டாவது முறையாக வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு கட்டாரில் நடந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஆர்ஜன்டீன அணி வெற்றி பெற உதவிய மெஸ்ஸி, பாரிஸில் நேற்று முன்தினம் (30) நடைபெற்ற விருது விழாவிலே உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான இந்த விருதை கைப்பற்றினார்.

ஏற்கனவே இந்த விருதை அதிக முறை வென்றவராக சாதனை படைத்திருக்கும் 36 வயதான மெஸ்ஸி, அந்த சாதனையை விரிவுபடுத்துவதாக இம்முறை அந்த விருதை வென்றுள்ளார்.

இதில் மான்செஸ்டர் யுனைடட்டின் முன்கள வீரர் ஏர்லிங் ஹாலன்ட் இரண்டாவது இடத்தைப் பிடித்ததோடு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஹட்ரிக் கோல் பெற்ற இரண்டாவது வீரராக கடந்த உலகக் கிண்ணத்தில் சாதனை படைத்த பிரான்ஸின் முன்கள வீரர் கைலியன் ம்பப்பே மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT