நக்ஷபந்தியா சூபி தரீக்காவின் ஆன்மீக தலைவரும், நக்ஷ்பந்தி தரீக்காவின் 41ஆவது உலகத் தலைவருமான மௌலானா செய்யத் ஷேக் மெஹ்மத் ஆதில் ரப்பானி அவர்கள் இன்று 1ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்கிறார். அவர் கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய பகுதிகளில் வாழும் தனது முரீத்களையும் சந்திக்கவுள்ளார்.
கடந்த காலங்களில் 13 தடவைகளுக்கு மேல் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மௌலானா செய்யத் ஷேக் நாசிம் அல் ஹக்கானியின் வாரிசாக நியமிக்கப்பட்ட பின்னர், ஷேக் மெஹ்மத்தின் இலங்கைக்கான 5ஆவது சுற்றுப்பயணம் இதுவாகும்.
ஷேக் மெஹ்மத் பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சூஃபி மிஸ்டிக் மற்றும் கவிஞரான மௌலானா ரூமி மற்றும் காதிரி சூஃபியாவின் புகழ்பெற்ற ஷேக் அப்துல் காதிர் அல் ஜைலானியின் நேரடி வழித்தோன்றலாவார்.
மௌலானா அவர்கள் எதிர்வரும் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் பிரசங்கத்தையும் தொழுகையையும் கொழும்பு 6, வெள்ளவத்தை டபிள்யூ.ஏ. டி. சில்வா மாவத்தை மஸ்ஜித் மக்பூலில் நடத்துவார்.மௌலானாவை சந்திக்க ஆர்வமுள்ளவர்கள் நக்ஷ்பந்தி மகாம், 24, 28வது லேன், ப்ளவர் ரோட், கொழும்பு 7 என்ற முகவரியில் தரிசிக்கலாம்.
ருஸைக் பாரூக்