காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி 785/1 இலக்கமுடைய பேருந்து சேவை இன்று புதன்கிழமை ( 01) முற்பகல் 10.00 மணி முதல் மீண்டும் ஆரம்பமாகின்றது.
காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நகர் செல்லும் இப்பேருந்து, மதியம் 1.20 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகர் நோக்கி புறப்படும். மூளாய் டச்சு வீதி ஆரம்பம் முதல் சித்தங்கேணி டச்சு வீதி முடிவுவரையான வீதியை அண்டி வாழும் மக்கள் இப்பேருந்து சேவையால் பயனடைய முடியும்.
கடந்த காலத்தில் நடைபெற்ற காரைநகர் – யாழ்ப்பாணம் பேருந்து சேவை, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தனது பயணத்தை தொடர்வதில் சிரமத்தை எதிர்கொண்டு தடைப்பட்டது. மீண்டும் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், நேர அட்டவணையை பின்பற்றி பயணிகள் நன்மை அடையலாமென, யாழ். மற்றும் காரைநகர் இ.போ.ச. சாலை முகாமையாளர்கள் தெரிவித்தனர்.
கோப்பாய் குறூப் நிருபர்