நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான ரபியுனில் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு பேருவளை, சீனன்கோட்டை பெருகமலை நளீம் ஹாஜியார் பிளேஸ் ஸாக்கிரீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் வருடாந்தம் நடைபெறும் ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸ் அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச ஜமாஅத்தாரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மௌலவி கபீல்தீன் (அலவி) விஷேட சொற்பொழிவாற்றினார்.
பள்ளிவாசலின் பிரதம இமாம்களான மௌலவி எஸ்.எச்.எம் இம்ரான் (ஹூமைதி) இம்மஜ்லிஸூக்கு தலைமை வகித்தார்.
அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஸூப்ஹான மௌலித் மஜ்லிஸூம் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து வலீபா யாகூதிய்யாவும் மற்றும் இஷாத் தொழுகையின் பின்னர் திக்ர் (ஹழரா) நிகழ்வும் துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.