196
அடைமழை காரமாக பதுளை கொழும்பு புகையிரத சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. பதுளை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிக மழை பெய்து வருவதால் ஆங்காங்கு மண் சரிவுகளும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (திங்கள்) பெய்த மழையின் காரணமாக ஹப்புத்தளை இதல்கஸ்தென்ன புகையிரத நிலையத்துக்கு அருகில் பாரிய மண் சரிவு ஏற்பட்டு பாரிய கல் புகையிரத வீதியில் விழுந்ததில் புகையிரத வீதி முற்றாக மூடி உள்ளது. இதன் காரணமாக கொழும்பு பதுளை புகையிரத சேவை ஹப்புத்தளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொட்டும் மழையினை பொருட்படுத்தாத புகையிரத ஊழியர்கள் புகையிரதப் பாதையினை சீர்படுத்தி வருகின்றனர்.
ஊவா சுழற்சி நிருபர்