‘உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இறக்காமம் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டிலும் இறக்காமம் இளைஞர்கள் அமைப்பின் உதவியுடனும் இறக்காமம் பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வு வெற்றிகரமாக நிறைவுபெற்றது. பிரதேச செயலாளர் அஷ்ஷேய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் (நளீமி) வழிகாட்டலின் கீழ், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.ஸி.
அஹமட் நசீல் தலைமையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. அம்பாறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இரத்த வங்கியின் அவசர வேண்டுகோளுக்கமைவாக இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அவசர குருதித் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் இறக்காமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களில் அதிகளவானோர் குருதி நன்கொடை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், கணக்காளர் திருமதி றிம்சியா அர்சாட், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். தௌபீக், இறக்காமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த சேனாரட்ன உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இறக்காமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என அதிகளவானோர் குருதி நன்கொடை வழங்கி உயிர் காக்கும் உன்னத பணியில் இணைந்து கொண்டனர்.
( மாளிகைக்காடு குறூப் நிருபர்)