Saturday, April 27, 2024
Home » ஊருக்குள் புகுந்த யானை; சொத்துக்களுக்கு சேதம்

ஊருக்குள் புகுந்த யானை; சொத்துக்களுக்கு சேதம்

by damith
October 16, 2023 5:55 am 0 comment

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஊருக்குள் புகுந்த யானையின் அட்டகாசத்தால் சொத்துக்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஓட்டமாவடி ஆற்றின் ஊடாக பிரதேசத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் ஓட்டமாவடி 02 ஜீ.எஸ்.ஓ.வீதியில் உள்ள இரண்டு வீட்டின் மதில்கள் மற்றும் பயன்தரக்கூடிய மரங்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.

இரவு யானையின் அட்டகாசத்தின் போது வீட்டில் இருந்த சிறுவர்களும் பெண்களும் மிகவும் அச்சத்தில் இருந்ததாகவும் எங்களுக்கு தொடர்ந்தும் யானைகளின் தொல்லை இருப்பதாகவும் இதற்கு உரிய அதிகாரிகள் தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஊரின் ஓட்டமாவடி பிரதேசத்தின் சன நெரிசல்மிக்க பிரதான பகுதிக்குள் காட்டு யானை புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளமையினால் ஓட்டமாவடிப் பிரதேச மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

பாசிக்குடா நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT