253
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், பெபிலியான சுனேத்ரா தேவி ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதியுமான மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரரின் பிறந்த தினம் (10) நடைபெற்றது. இந்நிகழ்வில்
சர்வ மதத் தலைவர்களான சிவ ஸ்ரீ கலாநிதி பாபுசர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி மற்றும் கலாநிதி நிஷான் குரே பாதிரியார் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் அன்னாரின் விஹாரைக்கு விஜயம் செய்து நாயக தேரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் போது சர்வ மதத்தலைவர்களுடன் இன மத ஒற்றுமைக்கான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லும் விஷேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.