இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கிடையல் இடம்பெறும் மோதல்களால், நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி செனரத் அறிவித்துள்ளார்.
இஸ்ரேலில், இலங்கையர்கள் தொழில் செய்யும் இடங்களில் ஏதேனும் பிரச்சினை இருக்குமானால் 0094716640560 என்ற
வட்ஸ்அப் இலக்கத்துக்கு தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு தேவைப்படும் உதவிகள் தொடர்பில் தகவல் தெரிவிப்பின்,தூதுவராலயம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான உதவிகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கு இரண்டு அதிகாரிகள் முழு நேரக் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதேநேரம், இஸ்ரேலில் உள்ள உறவினர்கள் தொடர்பில், தகவல்கள் கிடைக்காதிருப்பின், 1989 என்ற துரித இலக்கத்துக்கு தகவல் வழங்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.