Monday, April 29, 2024
Home » வாகன விபத்தில் விசேட அதிரடிப்படை வீரர்கள் இருவர் பலி!

வாகன விபத்தில் விசேட அதிரடிப்படை வீரர்கள் இருவர் பலி!

- மேலும் 7 பேர் படுகாயம்; இருவரின் நிலை கவலைக்கிடம்

by Prashahini
October 10, 2023 10:08 am 0 comment

வவுனியா – வெளிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை(STF) கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளதோடு, 7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (09) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான ஜீப் ரக வண்டி ஒன்று வெளிக்குளம் பகுதியில் பயணிக்கும் போது வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது ஜீப் வண்டியில் பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

குறித்த விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT